|
பொ-ரை: திருநீறு பூசி நிமிர்ந்த சடையின்மேல் பிறையும் கங்கையும் சூடும் பெருமான் உறையும் பதியாகியதும், களைகளாகிய பிரம்பு முதலியவை ஒருங்கும் வயல் வளமுடைய திருவாஞ்சியத்தைத் தெளிந்து வாழ்பவர்க்குச் செல்வம் பெருகும். கு-ரை: மாறுதான் ஒருங்கும் வயல் - நெற் பயிர்களுக்கு மாறாகிய களைகள் அழிந்து குறையும் வயல்கள். தேறி - தெளிந்து. |