பாடல் எண் : 7 - 11
விண்ட மாமலர் மேலுறை வானொடும்
கொண்டல் வண்ணனுங் கூடி யறிகிலா
அண்ட வாணன்த னாரூ ரடிதொழப்
பண்டை வல்வினை நில்லா பறையுமே.
11
பொ-ரை: விரிந்த மலர்மேலுறை பிரமனும், மேக வண்ணனாகிய திருமாலும் கூடி அறியகில்லாத திருவாரூர் அண்டவாணனது திருவடிகளைத் தொழப் பழைய வல்வினைகள் நில்லாமற் கெடும்.
கு-ரை: கொண்டல் - மேகம். ஆரூர் அண்டவாணன் தன் அடிதொழ எனக்கொண்டு கூட்டுக.