|
பொ-ரை: நீலக்குடி உடைய பெருமான், கங்கையாற்றுடன் கூடிய நீண்ட சடையையுடையவன். உமாதேவியை ஒரு கூற்றிற் கொண்ட இயல்பினன். திருமேனிக்கு அழகு தருவதாகிய திருநீற்றை உடையவன். திருவடி போற்றினார் இடர்களைப் போக்கும் புனிதன். கு-ரை: ஆற்ற - மிக. ஆயிழையாள் - அழகிய அணிகலன்கள் அணிந்தவள். ஒரு கூற்றன் - ஒரு பாகத்தின்கண்ணே உடையவன். கோலமதாகிய - அழகிய. போற்றினார் - தன்னைப் போற்றியவர்களது. இடர் - துன்பங்களை. புனிதன் - தூயவன். |