|
பொ-ரை: எண்ணமெங்கும் நிறைந்த எறும்பியூர் இறைவன், கண்ணுக்கு நிறைந்த பெருமைமிக்க பவளத்திரளும், விண்ணில் நிறைந்த சுடர் விரிகின்ற சோதி வடிவானவனும், உள்ளத்துள் நிறைந்து உருவாகி உயிராகியவனும் ஆவன். கு-ரை: கண் நிறைந்த - கண் பார்வைக்குச் சிறந்த. கனம் - திரண்ட. பவளத்திரள் - பவளங்களின் தொகுதி. உள் நிறைந்து - மனத்திற்குள் நிறைந்து. உருவாய் - என் வடிவமாய். எண் நிறைந்த - என் எண்ணத்தில் நிறைந்த. |