பாடல் எண் : 8 - 3
பரவி நாளும் பணிந்தவர் தம்வினை
துரவை யாகத் துடைப்பவர் தம்மிடம்
குரவம் நாறுங் குழலுமை கூறராய்
அரவ மாட்டுவர் போலன்னி யூரரே.
3
பொ-ரை: நாள்தோறும் வாழ்த்தி வணங்குவோரது வல்வினைகளைத் துரக்கும்படி நீக்குபவரும், தம்மிடப்பாகத்தில் குரவு நறுமணம் வீசும் குழல் உமையைக் கூறாகவுடையவரும், அரவம் ஆட்டு பவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே.
கு-ரை: பரவி -இறைவன் புகழை விரித்தோதி. நாளும் - நான் தோறும். பணிந்தவர்தம் - வணங்கியவர்களுடைய. துரவையாக - இல்லையாக. துடைப்பவர் - போக்குபவர். குரவம் - குரவமலர். குழல் - கூந்தல். கூறராய் - ஒருகூற்றிற் கொண்டவராய்.