|
பொ-ரை: இலங்கை அரசனாம் இராவணன் இருபது தோள்களும் இற்றுச் சுழலும்படியாகத் திருக்கயிலைமாமலை மேல் திருவிரலை ஊன்றியவன் ஆகிய கொன்றைமாலையணிந்த பெருமானுடைய அன்பிலாலந்துறையை வலங்கொண்டு வழிபடுவாரைத் தேவர்கள் வலம் கொண்டு வணங்கிப் போற்றுவர். கு-ரை: இலங்கை வேந்தன் - இராவணன். இற்று - நெரிந்து. மலங்க - வருந்த. மாமலைமேல் - சிறந்த திருக்கயிலை மலையின் மேல். அலங்கல் - மலர்மாலை. வலங்கொள்வாரை - வலமாகச் சுற்றி வணங்குவாரை. |