|
பொ-ரை: இராவணனது அம்முடிகளை நெருக்கி, புகழை உடைய வானவர் நின்று இருக்கு வேதம் உரைத்துப் பணிந்து ஏத்த இருந்தவனுடைய "திருக்கொடுமுடி" என்றலும் தீவினையின் கருக்கெடும்; இது கைகண்ட யோக நெறியாகும். கு-ரை: அம்முடி நெருக்கிநின்று - கூட்டமாய் ஒருவர் முடியோடு மற்றொருவர் நெருக்கிக்கொண்டு நின்று. இசை-பொருந்திய இருக்குவேதமொழி. கரு-பிறவி. |