|
பொ-ரை: பொருளும், சுற்றத்தாருமாகிய பொய்ம்மையை விட்டு நீர் மருளுதற்குரிய மாந்தரை மாற்றி மயக்கம் நீக்கி அருளுமாறுவல்ல ஆதியாய்! என்று கூறியதும் வான்மியூர் ஈசன் மயக்கம் நீக்குவன். கு-ரை: நீர்-நீங்கள். மருளும் மாந்தரை- உலக வாழ்வில் மயங்கி நிற்கும் மக்களை. மயக்கு அறுத்து-அறியாமையாகிய மயக்கத்திலிருந்து விடுவித்து. அருளுமாவல்ல-அருள் செய்யவல்ல. ஆதியாய்-முதன்மையானவனே. என்றலும்-என்று கூறியவுடனே. மருள்- பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் அறியாமையாகிய இருட்டு அறுத்திடும் - நீக்கும். |