|
பொ-ரை: ஞானமும், கல்வியும், நானறிந்த வித்தையும் பஞ்சாட்சரமே; நா கூறி வழிபடுவதும் அதனையே; நன்னெறி காட்டுவதும் அத்திருமந்திரமேயாகும். கு-ரை: ஞானமும் - பரஞானம். கல்வி - அபரஞானம். ஞானமும் கல்வியும் - கல்வியால் விளையும் அறிவும் கல்வியும். நானறிவிச்சை - நான் அறிந்தனவாய மந்திரம் அல்லது கலையுணர்வு. நன்னெறி - ஞானம், வீடுபேறடையும் வழி. |