|
பொ-ரை: இன்னும் கேட்பீராக; இளம் பிறையினைச் சூடிய அருளரசனாகிய சிவபெருமான் திருவடியோடுகூடிய உள்ளத்துடன் ஏத்தி வழிபடுவார்களையும் நிலைபெற்ற திருவைந்தெழுத்தாகிய மந்திரத்தில் ஒன்று வல்லவரையும் நீவிர் சாரவேண்டா. கு-ரை: இன்னம் கேண்மின் - இன்னமும் கேளுங்கள். மனத்துடன் - நிறைந்த மனத்தோடு. ஏத்துவார் - வணங்குபவர்கள். மன்னும் - என்றும் நிலைத்து நிற்பதாகிய. மந்திரந்தன்னில் - மந்திரத்தில். ஒன்று வல்லாரையும் - ஓரெழுத்து வல்லவர்களையும். சாரல் - அடையாதீர்கள். |