பாடல் எண் : 94 - 6
ஆதி யானை அமரர் தொழப்படும்
நீதி யானை நியம நெறிகளை
ஓதி யானை உணர்தற் கரியதோர்
சோதி யானைக்கண் டீர்தொழற் பாலதே.
6
பொ-ரை: முதல்வனும், தேவர்களால் தொழப்படும் நீதியானவனும், நியமயெறிகளை ஓதியவனும், உணர்தற்கு அரியதாகிய ஓப்பற்ற சோதியானும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்: காண்பீராக.
கு-ரை: ஆதியானை -முதலில் தோன்றியவனை. நியமம் - செய்வன தவிர்வனவாய வரையறை. நெறி - நூல்வழி.