|
பொ-ரை: கடல்வண்ணம் உடையவனாகிய திருமாலும் ஒள்ளிய தாமரைமலர் மேலானாகிய பிரமனும், " தலைவனே அருள்வாய்" என்று நாள்தோறும் விருப்பம் புரிந்து எண்ணப் படுவாராகிய இறைவன் பாதங்களை ஏத்த நம்பாவங்கள் கெடும். கு-ரை: ஓத வண்ணன் - கடல்நீரை ஒத்த கரிய திருமால் ஒண்மலர்ச் செல்வன் - பிரமன் கருதப்படுபமல் - மனத்தால் எண்ணித் துதிக்கப்படுவர் தியானிக்கப்படுபவருடைய தியேயப்பொருளாயுள்ளவன் " சிவஏகோத்தியேய " என்பது வேதம். |