|
பொ-ரை: தன்னில் தன்னை அறியும் தலைமகனாகிய இறைவன் தன்னில் ஒருவன் தன்னையறிந்தால் தலைப்படுவான்.தன்னில் தன்னை அறியும் அறிவிலாகில் தன்னில் தன்னையும் சார்தற்கு அரிய இயல்பினன் ஆவன். கு-ரை: தன்னில்தன்னை - தன்னுடைய உடலில் இறைவனை அறியில் - அறிவார்களேயானானல் தலைப்படும் - அவரவர் உள்ளத்தில் இடம்பெறுவான். அறிவிலனாய்விடில் - அங்ஙனம் ஒருவன் அறியா தொழிவானேயானால் தன்னில் தன்னையும் சார்தற் கரியன் - நம்மிடமுள்ள பெருமானை அடைதற்கு அரியவனாவான். |