பாடல் எண் : 97 - 30
இலங்கை மன்னனை யீரைந்து பத்துமன்
றலங்க லோடுட னேசெல வூன்றிய
நலங்கொள் சேவடி நாடொறும் நாடொறும்
வலங்கொண் டேத்துவார் வானுல காள்வரே.
30
பொ-ரை: இராவணனைப் பத்துத் தலைகளும் அன்று அணிந்திருந்த மாலைகளோடு உடனே கெட ஊன்றிய நலம் உடைய பெருமான் சேவடிகளை நாள்தோறும் வலம்கொண்டு வழிபடுவார் வானுலகினை ஆள்வர்.
கு-ரை: ஈரைந்து பத்தும் - இருபது தோள்களும் நாடொறும் - தினந்தோறும் தினந்தோறும் வணங்குதலின் இன்றியமையாமை குறித்தது.