|
பொ-ரை: பன்றியின் வெள்ளிய கொம்பினோடு எலும்பு அணிந்த அழகுமிக்க ஆனையினை ஈர்ந்து தோல் போத்துத் தீயுடன்ஆடினாலும், தான் அவ்வியல்புடையனாயினும் தேவர்கள் நாள் தோறும் தன்னையே வணங்குவர். கு-ரை: ஏனமருப்பு - பன்றிக்கொம்பு எழில்-அழக ஆனை ஈருரி - ஆனையினை உரித்த தோல் அனலாடினும் - தீயாடினாலும், தான் அவ்வண்ணத்தன் - தானும் அனலாடியதற்கேற்ப அனலின் நிறத்தையே உடையவன். வைகல் - நாடோறும் தானவண்ணம் பிச்சையேற்கும் கோலம் எனினுமாம். |