பாடல் எண் :1105
காற்ற னைக்கலக் கும்வினை போயறத்
தேற்ற னைத்திரு வண்ணா மலையனைக்
கூற்ற னைக்கொடி யார்புர மூன்றெய்த
ஆற்ற னையடி யேன்மறந் துய்வனோ.

4
பொ-ரை: காற்றாகியுள்ளவனும், கலக்குகின்ற வினைகள் விட்டு நீங்கத் தோற்றம்புரிபவனும், திருவண்ணாமலைத் தலத்துக் குடையவனும், உலகினை நன்றுந் தீதுமாய்க் கூறுசெய்து வகுத்தவனும், கொடியவர் புரங்கள் மூன்றையும் எய்த வீரநெறி உடையவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.
கு-ரை: காற்றன் - (அட்ட மூர்த்தங்களில் காற்றும் ஒன்றாதலின்) காற்று வடிவானவன். `காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றிழு என்றார் திருத்தாண்டகத்தும். கலக்கும் - உயிர்களைத் துன்புறுத்தும். தேற்றன் - தெளிவிப்பவன். பழவினைகளைப் பாறுவித்துத் தன்னடியார்களைத் தெளிவிப்பவன் என்க. கூற்றன் - கூறுசெய்பவன். ஆற்றன் - சமயநெறிகளாயிருப்பவன். நீதிநெறியே வடிவாக உடையன் எனலுமாம். (ஆறு - நெறி)