பாடல் எண் :1125
விடையு மேறுவர் வெண்தலை யிற்பலி
கடைகள் தோறுந் திரியுமெங் கண்ணுதல்
உடையுஞ் சீரை யுறைவது காட்டிடை
அடைவர் போலரங் காகவா ரூரரே.

4
பொ-ரை: திருவாரூர்ப் பெருமான், விடையும் ஏறுவர்; வெண்தலையிற் பலி பெறுவதற்கு இல்லங்களின் முன்புறந்தோறும் திரியும் கண்ணுதலார்; உடையாகச் சீரையைக் கொண்டவர். உறைவதற்குச் சுடு காட்டையே அரங்கமாக அடைவர்.
கு-ரை: சீரை - கிழிந்த சீலை அல்லது மரவுரி.