பாடல் எண் :1166
அரிய நான்மறை யோதிய நாவரோ
பெரிய வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
விரிகொள் கோவண ஆடைவிருத்தரோ
பெரிய வான்கத வம்பிரி விக்கவே.

4
பொ-ரை: அருமை உடைய நான்மறை அருளிய நாவுடையவரே! பெரிய புரம் எரியுண்ணுமாறு சுட்ட உயர்ந்த தேவரே! விரிந்த கோவண ஆடை கொண்ட மிகப்பழையவரே! பெரிய இக்கதவினைப் பிரித்தருள்வீராக.
கு-ரை: அரிய - பொருள் உணர்தற்கு அரிய (நான்மறை). விரிகொள் - விரித்தலைக்கொண்ட. விருத்தர் - பழையோன்.