பாடல் எண் :1168
பூக்குந் தாழை புறணி யருகெலாம்
ஆக்குந் தண்பொழில் சூழ்மறைக் காடரோ
ஆர்க்குங் காண்பரி யீரடி கேளுமை
நோக்கிக் காணக் கதவைத் திறவுமே.

6
பொ-ரை: ஊர்ப்புறத்து நீரின் மருங்கெலாம் தாழை பூப்பதும், தண்பொழில் சூழ்வதுமாகிய மறைக்காட்டுறையும் பெருமானே! யார்க்குங் காண்டல் அரியீர்! அடிகளே! உமைநோக்கிக் காணும் பொருட்டு இக்கதவைத் திறந்தருள்வீராக!
கு-ரை: புறணியருகெலாம் பூக்கும் தாழையும் தண்ணிதாக ஆக்கும் பொழிலும். சூழ் - சூழ்ந்த. அடிகேள் - தவமுனிவரே: உமை - உம்மை.