|
பாடல் எண் :1210 | ஏற தேறு மிடைமரு தீசனார் கூறு வார்வினை தீர்க்குங் குழகனார் ஆறு செஞ்சடை வைத்த அழகனார் ஊறி யூறி யுருகுமெ னுள்ளமே. |
| 6 | பொ-ரை: விடையினை உகந்தேறும் இறைவரும், தன்னைக் கூறுவார் வினைகளைத் தீர்க்கும் குழகரும், ஆறு செஞ்சடையின்கண் வைத்த அழகருமாகிய இடைமருதூர் எம்பிரானையெண்ணி என் உள்ளம் ஊறி ஊறி உருகுகின்றது. கு-ரை: ஏறதேறும் - இடபமேறும். கூறுவார் - தன்னாமம்சொல்லிப் புகழ்ந்து போற்றுவார். வினை - துன்பத்திற்குக் காரணமாகிய வினை. என் உள்ளம் ஊறி ஊறி உருகும் - என் மனமானது நெக்கு நெக்கு உருகும். |
|