|
பாடல் எண் :1298 | பறையி னோசையும் பாடலி னோசையும் மறையி னோசையும் மல்கி யயலெலாம் நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர் உறையு மீசனை யுள்குமென் னுள்ளமே. |
| 4 | பொ-ரை: பறையின் ஓசையும், தெய்வப்பாடல்களின் ஓசையும், வேதங்களின் ஓசையும் நிறைந்து மருங்கெல்லாம் ஒலிக்கின்ற பூம்பொழில் சூழ்ந்த திருநின்றியூரில் உறையும் ஈசனை என் உள்ளம் உள்குகின்றது. கு-ரை: பறை - தோற்பறை; வாத்திய விசேடம். மல்கி - நிறைந்து. அயல்எலாம் - ஊர்ப்புறமெங்கும். நிறையும் - நிறைகின்ற. பூம்பொழில் - பூக்களை உடையதாகிய சோலை. உள்கும் - எண்ணும். |
|