|
பாடல் எண் :1451 | இறைவ னாரிமை யோர்தொழு பைங்கழல் மறவ னார்கட வூரின் மயானத்தார் அறவ னாரடி யாரடி யார்தங்கள் பிறவி தீர்ப்பர் பெருமா னடிகளே. |
| 4 | பொ-ரை: கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள், தேவர்கள் தொழுகின்ற பைங்கழலை உடைய இறைவர்; வீரம் உடையவர்; அறமே வடிவானவர்; அடியார்களின் பிறவி நோயைத் தீர்ப்பவர். கு-ரை: பைங்கழல் - பைம்பொன் கழல். மறவனார் - வலியர். அறவனார் - அறவடிவினர். இவற்றிற்கு மறக்கருணை செய்பவர், அறக்கருணை செய்பவர் எனலுமாம். |
|