பாடல் எண் :1472
கங்கை யைச்சடை வைத்து மலைமகள்
நங்கை யையுட னேவைத்த நாதனார்
திங்கள் சூடித் திருக்கழிப் பாலையான்
இங்கு வந்திடு மென்றிறு மாக்குமே.

6
பொ-ரை: இப்பெண், சடையிற் கங்கையை வைத்து மலைமகளாகிய நங்கையைத் தன்னொரு பங்கில் வைத்த இறைவனாகிய திருக்கழிப்பாலைப் பெருமான் இளம்பிறை சூடி இங்குத் திருவுலாப்போதற்கு எழுந்தருள்வான் என்று இறுமாப்பு அடைகின்றாள்.
கு-ரை: மலைமகள் நங்கை - பார்வதி. இங்குவந்திடும் - என்னைத்தேடி இங்கே ஆசையோடு வருவான் என்று சொல்லிப் பெருமையடைவாள். இருவரையும் கொண்டவர் என்னையும் கொள்வர் என்பது குறிப்பு.