|
பாடல் எண் :1477 | மத்த மாமலர் சூடிய மைந்தனார் சித்த ராய்த்திரி வார்வினை தீர்ப்பரால் பத்தர் தாந்தொழு தேத்துபைஞ் ஞீலியெம் அத்த னைத்தொழ வல்லவர் நல்லரே. |
| 2 | பொ-ரை: ஊமத்தம் மலர்களைச் சூடிய பெருவீரரும், சித்தராகத் திரிபவரும், அன்பர் பலர் தொழுதேத்தும் பைஞ்ஞீலியில் உறையும் அத்தரும், தொழுவார் வினை தீர்ப்பவரும் ஆகிய அப்பெருமானைத் தொழும் வல்லமை உடையவர் நல்லவர் ஆவர். கு-ரை: மத்தமாமலர் - ஊமத்தமாகிய சிறந்த மலர். சித்தராய் - சித்தத்தில் வைத்தவர்களாய். வினைதீர்ப்பரால் என்பதிலுள்ள ஆல் அசை. அத்தன் - தலைவன், தந்தை. |
|