|
பாடல் எண் :1556 | பொய்ய னைத்தையும் விட்டவர் புந்தியுள் மெய்ய னைச்சுடர் வெண்மழு வேந்திய கைய னைக்கச்சி யேகம்பம் மேவிய ஐய னைத்தொழு வார்க்கில்லை யல்லலே. |
| 9 | பொ-ரை: அனைத்துப் பொய்யையும் விட்ட உயர்ந்தவர் புந்தியுள் மெய்யாகவிளங்குபவனும், சுடர்விடுகின்ற வெண்மழுஏந்திய கையை உடையவனும் ஆகிய கச்சியேகம்பத்தை விரும்பிப் பொருந்திய தலைவனைத் தொழுவார்க்கு அல்லல்கள் இல்லையாம். கு-ரை: புந்தியுள்- மனத்துள். மெய்யனை - உண்மைப் பொருளாய் விளங்குபவனை. அல்லல் - துன்பம். |
|