|
பாடல் எண் :1587 | மேகந் தோய்பிறை சூடுவர் மேகலை நாகந் தோய்ந்த அரையினர் நல்லியல் போகந் தோய்ந்த புணர்முலை மங்கையோர் பாகந் தோய்ந்தவர் பாலைத் துறையரே. |
| 9 | பொ-ரை: திருப்பலைத்துறையல், மேகமண்டலத்தைத் தோய்கின்ற பிறையினைச் சூடுவர்: மேகலையாக நாகம் தோய்ந்த அரையினை உடையவர்; நல்லியலுடைய போகம் தோய்தற்குரிய இரண்டு தனங்களையுடைய உமையம்மையை ஒரு பாகம் தோய்ந்தவர். கு-ரை: மேகலை-பெண்கள் இடையில் அணியும் அணிகலன். மேகலை கூறியது மாதொரு வறராதல் பற்றி. |
|