|
பாடல் எண் :1589 | உரத்தி னாலரக் கன்னுயர் மாமலை நெருக்கி னானை நெரித்தவன் பாடலும் இரக்க மாஆருள் செய்தபா லைத்துறை கரத்தி னால்தொழு வார்வினை யோயுமே. |
| 11 | பொ-ரை: தன் ஆற்றலினால் இராவணன் உயர்ந்த திருக்கயிலாய மாமலையை நெருக்கலுற்றானை நெரித்து,அவன் பாடலும் கேட்டு இரக்கமாக அருள்புரிந்த திருப்பாலைத்துறையைக் கரங்களால் தொழுவார் வினை நீங்கும். கு-ரை: உரத்தினால்-வலிமையினால். உயர்மாமலை-உயர்ந்த கயிலைமாமலையினால். நெருக்கினானை-மலைமகளை அஞ்சச் செய்தவனை நெரித்து-ஊன்றி கரத்தினால் -கைகளால், |
|