|
பாடல் எண் :1603 | முற்றா வெண்மதி சூடும் முதல்வனார் செற்றார் வாழுந் திரிபுரந் தீயெழ விற்றான் கொண்டெயி லெய்தவர் வீரட்டம் கற்றா லல்லதென் கண்துயில் கொள்ளுமே. |
| 4 | பொ-ரை: முதிராத வெள்ளிய பிறையினைச் சூடும் முதல்வரும், சினக்கப்பட்டார் வாழும் மூன்று புரங்கள் தீயெழுமாறு மேருமலையாகிய வில்லைத் தாம் கொண்டு எய்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தைக் கற்றால் அல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ? கு-ரை: முற்றா - இளைய. செற்றார் - பகைவர். வில்தான் கொண்டு எயில் எய்தவர் எனப்பிரிக்க. |
|