|
பாடல் எண் :1629 | என்பு பூண்டெரு தேறி யிளம்பிறை மின்பு ரிந்த சடைமேல் விளங்கவே நன்ப கற்பலி தேரினும் நாரையூர் அன்ப னுக்கது வம்ம வழகிதே. |
| 8 | பொ-ரை: எலும்புகளைப் பூண்டு, எருதின்மேல் ஏறி, இளம் பிறையினை மின்னலை முறுக்கினாலொத்த ஒளிச்சடையின் மேல் விளங்கச் சூடி, நல்ல பகலிலும் பலிதேர்வராயினும், திருநாரையூரில் உள்ள அன்பு வடிவாய சிவபெருமானுக்கு அது மிக்க வியப்பும் அழகும் உடையதே. கு-ரை: மின்புரிந்த-மின்னலைப்போல் முறுக்கி விளங்கிய. நன்பகல்- நல்ல பகற்போது. பலிதேரினும்-உணவு இரந்தாலும். அன்பன்-அன்பே வடிவமாயவன். |
|