|
பாடல் எண் :1631 | கடுக்கை யஞ்சடை யன்கயி லைம்மலை எடுத்த வாளரக் கன்தலை யீரைஞ்சும் நடுக்கம் வந்திற நாரையூ ரான்விரல் அடுத்ததன்மையு மம்ம வழகிதே. |
| 10 | பொ-ரை: கொன்றையினை உடைய அழகார்ந்த சடையனுக்குரிய திருக்கயிலாயத் திருமலையை எடுக்கலுற்ற வாளினை உடைய இராவணனது பத்துத் தலைகளும் நடுங்கி நெரியும் வண்ணம் திருநாரையூர்ப் பெருமான் திருவிரல் இயக்கிய தன்மை வியப்பும் அழகும் உடையதேயாகும். கு-ரை: கடுக்கை-கொன்றை. அம்-அழகிய. நடுக்கம் வந்து இற-நடுக்கமடைந்து நொறுங்க. அடுத்த-ஊன்றிய. |
|