பாடல் எண் :1636
அல்ல லாயின தீரு மழகிய
முல்லை வெண்முறு வல்லுமை யஞ்சவே
கொல்லை யானை யுரித்தவன் கோளிலிச்
செல்வன் சேவடி சென்று தொழுமினே.

5
பொ-ரை: அழகிய முல்லையைப் போன்ற வெள்ளிய முறுவலை உடைய உமாதேவியார் அஞ்சுமாறு குறிஞ்சியில் வாழும் யானையை உரித்தவனும், கோளிலியில் உறையும் திருவருட் செல்வனுமாகிய பெருமான் சேவடிகளைச் சென்று தொழுவீர்களாக; உம் அல்லலாயின அனைத்தும் தீரும். `அல்லல் நீங்கும் என்பதற்குக் கயாசுரனை அழித்துத் தேவர்களைக் காத்தமை சான்றுழு என்றபடி.
கு-ரை: அல்லல் -துன்பம். முல்லை வெண்முறுவல்-முல்லை போலும் வெள்ளிய பற்கள். கொல்லை -தினைப்புனம். குறிஞ்சிக் கருப்பொருள் என்றபடி. இது இன அடை. யானை -கயாசுரன் வீடுமே, ஏகாரம் தேற்றம்.