|
பாடல் எண் :1650 | மாலும் நான்முக னாலு மறிவொணாப் பாலின் மென்மொழி யாளொரு பங்கனைக் கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலி நீல கண்டனை நித்தல் நினைமினே. |
| 9 | பொ-ரை: மாலும் பிரமனும் அறியவியலாத, பாலனைய மென்மொழியுடைய உமையொரு கூறனாகிய அழகுடைய பொழில் சூழும் திருக்கோளிலியில் உள்ள நீலகண்டனை நாள் தோறும் நினைந்து தொழுவீராக. கு-ரை: அறிவொணா - அறியமுடியாத. பாலின் மென்மொழி - பாலனைய மென்மையான இனிய மொழி. நித்தல் நாடோறும். |
|