|
பாடல் எண் :1651 | அரக்க னாய இலங்கையர் மன்னனை நெருக்கி யம்முடி பத்திறுத் தானவற் கிரக்க மாகிய வன்றிருக் கோளிலி அருத்தி யாயடி யேதொழு துய்ம்மினே. |
| 10 | பொ-ரை: அரக்கனாகிய இலங்கையர் மன்னன் இராவணனை நெருக்கி, அம்முடிகள் பத்தினையும் இறுத்தவனும், பின் அவனுக்கு இரங்கியவனும் ஆகிய பெருமான் உறையும் திருக்கோளிலிக்கு விருப்பமாகி, அவன் அடிகளே தொழுது உய்வீராக. கு-ரை: அம்முடி - அழகிய முடி. இறுத்தான் - அழித்தவன். அவற்கு - அவனுக்கு. அருத்தி - ஆசை. |
|