|
பாடல் எண் :1659 | ஓதி னத்தெழுத் தஞ்சுண ராச்சமண் வேதி னைப்படுத் தானைவெங் கூற்றுதை பாத னைப்பழை யாறை வடதளி நாத னைத்தொழ நம்வினை நாசமே. |
| 8 | பொ-ரை: அடியார் இனத்தே ஓதப்படும் திருவஞ்செழுத்தை உணராத சமணர்களை வேதனைப்படுத்தியவனும், வெங்கூற்றுவனை உதைத்த பாதம் உடையவனும் ஆகிய பழையாறை வடதளியில் உறையும் நாதனைத் தொழ நம் வினைகள் நாசமாம். கு-ரை: ஓதினத்து எழுத்தஞ்சும்- ஓதவேண்டிய திருவைந்தெழுத்தையும். உணரா-ஓதியுணராத. வேதினைப்படுத்தானை- துன்பம் செய்தவனை. வெங்கூற்று -கொடிய கூற்றை. உதை- உதைத்த. பாதன்-திருவடிகளையுடையவன். |
|