|
பாடல் எண் :1687 | காற்றி னுங்கடி தாகி நடப்பதோர் ஏற்றி னும்மிசைந் தேறுவ ரென்பொடு நீற்றி னையணி வர்நினை வாய்த்தமைப் போற்றி யென்பவர்க் கன்பர்புத் தூரரே. |
| 8 | பொ-ரை: புத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவர். காற்றைவிட விரைந்து நடப்பதாகிய ஒப்பற்ற இடபத்தினும் மனம் ஒத்து ஏறுவர்; எலும்பும் திருநீறும் அணிவர்; 'தம்மையே நினைவாகிப் போற்றி என்று வழிபடுவார்க்கு அன்பர் ஆவர். கு-ரை: கடிதாகி - விரைவுடையதாய். ஏற்றினும் - இடபத்தின் கண்ணும். இசைந்து - விரும்பி. நினைவாய்த் தம்மைப் போற்றி யென்பார்க்கு அன்பர். |
|