பாடல் எண் :1693
மாதனத்தைமா தேவனை மாறிலாக்
கோத னத்திலைந் தாடியை வெண்குழைக்
காத னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
நாத னைக்கண்டு நானுய்யப் பெற்றெனே.

4
பொ-ரை: பெருஞ்செல்வமாகிய அருட்செல்வம் உடையானும், மகாதேவனும், மாறுபாடில்லாத பஞ்சகவ்வியத் திருமுழுக்குக் கொள்பவனும், சங்கவெண்குழையணிந்த காதுடையவனும் ஆகிய கடுவாய்க்கரைத் தென்புத்தூரின் நாதனைக் கண்டு நான் உய்யப்பெற்றேன்.
கு-ரை: மா-பெரிய. தனத்தை -செல்வங்களின் வடிவாயிருப்பவனை. மாறிலா - ஒப்பில்லாத, கோதனத்தில்-பசுவினிடம் கிடைக்கும் செல்வங்களில் அல்லது பசுவின் பாற்காம்புகளில். ஐந்து- பஞ்சகவ்வியம்.