|
பாடல் எண் :1694 | குண்டு பட்டகுற் றந்தவிர்த் தென்னையாட் கொண்டு நற்றிறங் காட்டிய கூத்தனைக் கண்ட னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் அண்ட னைக்கண் டருவினை யற்றெனே. |
| 5 | பொ-ரை: மிகுந்த பல குற்றத்தை நீக்கி என்னை ஆட்கொண்டு நல்ல அருள் திறம் காட்டிய கூத்தனும், திருநீல கண்டனும் ஆகிய கடுவாய்க்கரைத் தென்புத்தூரில் பொருந்தியிருக்கும் பெருமானைக் கண்டு அருவினைகள் அற்றேன். கு-ரை: குண்டுபட்ட குற்றம்-சமணர்களிடையே அகப்பட்ட குற்றம். தவிர்த்து - நீக்கி. கண்டனை -நீலகண்டனை. அண்டன்- உலகங்களின் வடிவானவன். அற்றேன்- நீங்கினேன். |
|