பாடல் எண் :1726
புல்லம் ஊர்தியூர் பூவனூர் பூம்புனல்
நல்ல மூர்திநல் லூர்நனி பள்ளியூர்
தில்லை யூர்திரு வாரூர்சீர் காழிநல்
வல்ல மூரென வல்வினை மாயுமே
.

5
பொ-ரை: புல்லமும், ஊர்தியூரும், பூவனூரும், புனல் வளம் உடைய நல்லமும், ஊர்திநல்லூரும், நனிபள்ளியூரும், தில்லையூரும், திருவாரூரும், சீர்காழியும், நல்லவல்லமும் ஆகியவற்றைக் கூறியவளவிலேயே வல்வினை நீங்கும்.
கு-ரை: புல்லம் - எருது. எருது வாகனனாகிய சிவபெருமான் எழுந்தருளிய ஊர்கள் இவை. இத்தலங்களை நினைத்துச்சொல்லவினை மாயும் என்க.