|
பாடல் எண் :1726 | புல்லம் ஊர்தியூர் பூவனூர் பூம்புனல் நல்ல மூர்திநல் லூர்நனி பள்ளியூர் தில்லை யூர்திரு வாரூர்சீர் காழிநல் வல்ல மூரென வல்வினை மாயுமே. |
| 5 | பொ-ரை: புல்லமும், ஊர்தியூரும், பூவனூரும், புனல் வளம் உடைய நல்லமும், ஊர்திநல்லூரும், நனிபள்ளியூரும், தில்லையூரும், திருவாரூரும், சீர்காழியும், நல்லவல்லமும் ஆகியவற்றைக் கூறியவளவிலேயே வல்வினை நீங்கும். கு-ரை: புல்லம் - எருது. எருது வாகனனாகிய சிவபெருமான் எழுந்தருளிய ஊர்கள் இவை. இத்தலங்களை நினைத்துச்சொல்லவினை மாயும் என்க. |
|