பாடல் எண் :1763
வாடி நீர்வருந் தாதே மனிதர்காள்
வேட னாய்விச யற்கருள் செய்தவெண்
காட னாருறை கின்ற கருவிலிக்
கோடு நீள்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

4
பொ-ரை: மனிதர்களே! நீர் துன்பங்களால் வாடிவருந்தாமல் அருச்சுனனுக்கு வேடனாய்வந்து அருள்செய்த திருவெண்காடனார் உறைகின்ற கிளைகள் நீண்ட பொழிலை உடைய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
கு-ரை: விசயற்கு - அருச்சுனனுக்கு. கோடுநீள் - மரக்கொம்புகள் நீண்டுள்ள. அடியாரிடர் தீர்க்க இறைவன்தானே வரும் என்பது குறிப்பு.