பாடல் எண் :1770
கண்ட பேச்சினிற் காளையர் தங்கள்பால்
மண்டி யேச்சுணும் மாதரைச் சேராதே
சண்டி யீச்சுர வர்க்கருள் செய்தவக்
கொண்டி யீச்சுர வன்கழல் கூறுமே.

1
பொ-ரை: காளை போன்ற ஆடவரிடத்துப் பொருந்திக் கண்டவாறு பேசும் பேச்சாகிய ஏச்சுண்ணும் பெண்களைச் சேராது, சண்டீச்சுரர்க்கு அருள் செய்த கொண்டீச்சுரத்து இறைவன் திருவடியைக் கூறுவீராக.
கு-ரை: கண்ட பேச்சினில் - பயனற்ற பேச்சுக்களில் ஈடுபட்டு. காளையர் தங்கள் பால் - இளைஞர்களிடத்து. மண்டி - நெருங்கி. ஏச்சுணும் - பின் அவரால் ஏசும்மொழிகளைப் பெறும். கழல் கூறும் - திருவடிகளின் பெருமைகளைக் கூறுங்கள். மாதராரிடத்து அல்லற்படுகிறவர்கள் இறைவன் திருவடிகளைப் பற்றினால் இன்புறுவர்.