|
பாடல் எண் :1772 | மாடு தானது வில்லெனின் மாநுடர் பாடு தான்செல்வா ரில்லைபன் மாலையாற் கூட நீர்சென்று கொண்டீச் சுரவனைப் பாடு மின்பர லோகத் திருத்துமே. |
| 3 | பொ-ரை: செல்வம் இல்லையென்றால், மாநுடர் பெருமையோடு சூழச் செல்வாரில்லை. ஆதலால், பல மாலைகளாற் கூட, நீர் சென்று கொண்டீச்சுரத்து இறைவனைப் பாடுவீராக; அவ்விறைவன் பரலோகத்து இருக்கவைக்கும். கு-ரை: மாடுதானது இல்லெனில் - செல்வம் இல்லையானால். செல்வம் இல்லையானால் அவரவரும் தம்போக்கிற் செல்வர். பாடு - பக்கம். செல்வாரும் என உம்மைதொக்கது. மாநுடர்பாடுதான் செல்வாரில்லை - மனிதர் பெருமையோடு ஒருவரிடத்துச் செல்லுதல் இல்லை. அடியாருடன் நீர் சென்று பலவகைப்பட்ட திருப்பதிகப் பாமாலைகளால் பாடுங்கள். இருத்தும் - அப்பெருமான் இருக்கச் செய்வான். |
|