|
பாடல் எண் :1787 | பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து வேண்டும் நல்வரங் கொள்விச யமங்கை ஆண்ட வன்னடி யேநினைந் தாசையால் காண்ட லேகருத் தாகி யிருப்பனே. |
| 8 | பொ-ரை: பாண்டுவின் மகனாகிய பார்த்தன் (அருச்சுனன்) பணிகள் செய்து தான் விரும்பிய நல்வரத்தைக் கொண்ட விசயமங்கையில் உறையும் ஆண்டவன் திருவடியே நினைந்து ஆசையால் அவனைக் காணுதலே கருத்தாக இருப்பன் அடியேன். கு-ரை: பாண்டுவின் மகன் - பாண்டு என்னும் குருகுலத் தரசனுடைய மகன். பார்த்தன் - அர்ச்சுனன். பணி செய்து - தொண்டு செய்து. வேண்டும் - விரும்பும். தலவரலாறு கூறியபடி. |
|