பாடல் எண் :1841
பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி
இறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடும்
சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல்
மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே.

3
பொ-ரை: திருச்சேறையுட் செந்நெறியில் வீற்றிருக்கும் சிறப்பை உடைய பெருமான் கழலார் திருவடிகளை மறப்பு இன்றி மனத்துள் வைத்தால், பிறப்பு, மூப்பு, மிக்கபசி, மிக்கபிணி, இறப்பு ஆகியவை நீங்கி இம்மையிலேயே இன்பம் வந்து எய்தும்.
கு-ரை: மூப்பு - முதுமைத் தன்மை. பெரும் பசி - மிக்க பசி. வான்பிணி - பெரிய தீராத நோய்கள். எய்திடும் - உண்டாகும். சிறப்பர் - சிறப்புடையவர். மறப்பதின்றி - மறவாமல். மனத்தினுள் வைக்க இன்பம் வந்தெய்திடும் என முடிக்க.