பாடல் எண் :1908
இன்று ளார்நாளை யில்லை யெனும்பொருள்
ஒன்றும் ஓரா துழிதரு மூமர்காள்
அன்று வானவர்க் காக விடமுண்ட
கண்ட னார்காட்டுப் பள்ளிகண் டுய்ம்மினே.<'/b>

9
பொ-ரை: ஊமர்களே! இன்றைக்கிருப்பார் நாளைக்கில்லை எனும் பொருள் ஒன்றும் உணராது திரிதருவோரே! அன்று தேவர்களின் பொருட்டு விடமுண்டதிருக்கழுத்தினரது காட்டுப்பள்ளி கண்டு உய்வீராக.
கு-ரை: இன்றுளார் - இன்றைக்கு இருப்பவர். நாளை இல்லை - மறுநாள் இல்லாதவராவர். எனும்பொருள் - என்று சொல்லும் பழமொழியின் உண்மைப்பொருள் மொழிகளை. உழிதரும் - திரியும்.