|
பாடல் எண் :1908 | இன்று ளார்நாளை யில்லை யெனும்பொருள் ஒன்றும் ஓரா துழிதரு மூமர்காள் அன்று வானவர்க் காக விடமுண்ட கண்ட னார்காட்டுப் பள்ளிகண் டுய்ம்மினே.<'/b> |
| 9 | பொ-ரை: ஊமர்களே! இன்றைக்கிருப்பார் நாளைக்கில்லை எனும் பொருள் ஒன்றும் உணராது திரிதருவோரே! அன்று தேவர்களின் பொருட்டு விடமுண்டதிருக்கழுத்தினரது காட்டுப்பள்ளி கண்டு உய்வீராக. கு-ரை: இன்றுளார் - இன்றைக்கு இருப்பவர். நாளை இல்லை - மறுநாள் இல்லாதவராவர். எனும்பொருள் - என்று சொல்லும் பழமொழியின் உண்மைப்பொருள் மொழிகளை. உழிதரும் - திரியும். |
|