பாடல் எண் :1909
எண்ணி லாஅரக் கன்மலை யேந்திட
எண்ணி நீண்முடி பத்து மிறுத்தவன்
கண்ணு ளார்கரு துங்காட்டுப் பள்ளியை
நண்ணு வாரவர் தம்வினை நாசமே
.

10
பொ-ரை: நல்லெண்ணமில்லாத இராவணன் மலையை எடுக்க, அவன் திருந்துமாறு திருவுளத்து எண்ணி, அவன் நீண்ட முடிகள் பத்தையும் இறுத்தவனுக்குரிய ஞானக்கண்ணுடையவர் கருதி உணரும் காட்டுப்பள்ளியை நண்ணுவாருடைய வினைகள் நாசம் அடையும்.
கு-ரை: எண்இலா - எண்ணமில்லாத (நம் செருக்கு இறைவன் திருமுன் நிற்குமா என்ற எண்ணம்). எண்ணி - இவனை நாம் திருத்துவது நிக்ரகத்தாலன்றியில்லை என்று எண்ணி. இறுத்தவன் - நெரித்தவன். கண்ணுளார் - அறிவுக்கண் உள்ள சான்றோர்கள்.