பாடல் எண் :2042
சரண மாம்படி யார்பிற ரியாவரோ
கரணந் தீர்த்துயிர் கையி லிகர்ந்தபின்
மரண மெய்திய பின்னவை நீக்குவான்
அரண மூஎணில் எணிதவ னல்லனே.

17
பொ-ரை: புகலடையத்தக்கவர் பிறர் யாவர்? செயலற்று உயிர் இறக்கம்போது நம் வினைக்குற்றங்களைத் தீர்த்து அருள்பவன் வேறு யாவன்? அரணமைந்த மூன்று கோட்டைகளையும் அழித்தவன் அல்லனோ?
கு-ரை: சரணமாம் படியார் - திருவடிகளில் அடைக்கலமாக அடைதற்குரிய தன்மையினர் பிறர்யாவர் என்க. சிவபெருமானைத் தவிரப் பிறர் யார் உள்ளனர்.
கரணம் - அந்தக்கரணங்கள், கையில் இகழ்ந்தபின் - கைவிட்டபின், நவை - வினைக்குற்றங்கள் அரண மூஎயில் அரணமைந்த மூன்று கோட்டைகள்.