பாடல் எண் :2059
அம்மா னையமு தின்னமு தேயென்று
தம்மா னைத்தத்து வத்தடி யார்தொழும்
செம்மா னநிறம் போல்தோர் சிந்தையுள்
எம்மா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே.

4
பொ-ரை: அம்மானை , அமுதே இன்னமுதே என்று தத்துவத்தை அறிந்த அடியார் தொழும் நம் தலைவனும் செம்மையாகிய பெருமை மிக்க நிறம்போல்தாகிச் சிந்தையுள் இருக்கும் எம்மானுமாகிய பெருமானை என் உள்ளம் கண்டு கொண்டது.
கு-ரை: அம்மானை - தலைவனை அமுதின் அமுதே அமுதத்தினும் மேலான அமுதம் போன்றவனே தம்மானை - தனக்குத் தானே தலைவனை தத்துவத்து அடியார் - தத்துவங்களை அறிந்த அடியவர்கள் செம்மானநிறம் - செம்மையான நிறம்.