பாடல் எண் :2060
கூறே றும்உமை பாகமோர் பாலராய்
ஆறே றுஞ்சடை மேற்பிறை சூடுவர்
பாறே றுந்தலை யேந்திப் பலவி(ல்)லம்
ஏறே றுமெந்தை யைக்கண்டனெுள்ளமே.

5
பொ-ரை: கூறாகப் பொருந்தி உடையொரு பாகராகிக், கங்கை ஏறிய சடைமேற் பிறை சூடியவராய் , பருந்துகள் ஏறிப்பறக்கும் வெண்டலை ஏந்திப் பல இல்லங்கள் தோறும் இடபம் ஏறிவரும் எந்தையை என் உள்ளம் கண்டு கொண்டது.
கு-ரை: கூறுஏறும் - உடம்பில் ஒரு பாதியில் பொருந்தும் பாற ஏறும் தலையேந்தி - இடுகாட்டுள் பொருந்திய மண்டையோட்டை ஏந்தி ஏறுஏறும் - இடபத்தில் ஏறும்.