|
பாடல் எண் :2075 | மற்று நற்றவஞ் செய்து வருந்திலென் பொற்றை யுற்றெடுத் தானுடல் புக்கிறக் குற்ற நற்குரை யார்கழற் சேவடி பற்றி லாதவர்க் குப்பய னில்லையே. |
| 10 | பொ-ரை: மற்றும் நற்றவங்கள் பல செய்து வருந்தினால் என்ன பயன்? திருக்கயிலாயத்தை உற்று எடுத்த இராவணனது உடல் புகுந்து இற்றுப்போம்படிப் பொருந்திய நல்லொலிக் கழல்களபணிந்த சேவடியினிடத்துப் பற்றுதல் இல்லாதவர்க்குப் பயனே இல்லை. கு-ரை: பொற்றை - மலை. இங்கே கயிலையைக் குறித்தது. உடல் பக்குஇற - உடல் அகப்பட்டு நெரிய. நற்குரையார் கழல் - நல்ல ஓலி பொருந்திய வீரக்கழல். |
|