பாடல் எண் :2080
கூவ லாமை குரைகட லாமையைக்
கூவ லோடொக்கு மோகட லென்றல்போல்
பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.

5
பொ-ரை: கிணற்றாமை கடலாமையை நோக்கி இக்கிணற்றோடொக்குமோ கடல்? என்று கூறுதலைப்போன்று தேவதேவனாகிய சிவபெருமானின் பெருந்தன்மையைப் பாவிகளாகிய மக்கள் பார்த்தற்கு அரிது என்பர்.
கு-ரை: கூவல் - கிணறு. குரை - ஒலிக்கின்ற. பாவகாரிகள் - பாவச்செயல் செய்பவர்கள். பார்ப்பரிது - இறைவனது தன்மையைக் காணுதல் முடியாது.